Thursday, July 2, 2009

உதயண குமார காவியம்

உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல் உஞ்சைக்காண்டத்தில் 3வது பாடல்:

மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்
அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம்.

இப்பாடலின் பொருள்:
மாணிக்கம் முதலிய மணிகளை இட்டுப் பொதிந்துள்ள துணியை,அந்த மணிகளைத் தன்னுள் கொண்டிருந்த காரணத்தினாலே, அத் துணியை இகழாமல் அந்த மணிகளோடே சேர்ந்து நன்கு மதித்து வைப்பார் உலகத்தினர். அது போலவே, அறிஞர்கள் பிறருடைய சொற்கள் குற்றமுடைய சொற்களாக இருந்தாலும்,அச்சொற்கள் தூய்மையுடைய நல்ல உறுதிப்பொருளைத் கொள்ளுமிடத்து, அணிகலண்களைப் போற்றுமாறு போற்றிக்கொள்வர்.

No comments:

Post a Comment