Wednesday, September 30, 2009

இராமாயணம்

இராமாயணம் முழுவதும் எண்ணிலடங்காத உவமைகள்.அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு உவமை கீழே:

கைகேயி இராமர் பதினான்கு வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டும்,பரதன் முடிசூட வேண்டும் ஆகிய இரண்டு வரங்களைப்பெறுகிறாள்.இராமர் கோசலையை விட்டுச் செல்லும்போது, தசரதனின் முக்கிய மந்திரியாகிய சுமந்திரர் இராமருக்கு இரதம் ஓட்டிக்கொண்டு சிறிது தூரம் செல்கிறார்.ச்ருங்கவேர்புரம்(குகனுடைய நாடு) என்ற இடத்தில் இராமர்,சீதை,இலக்குவன்,சுமந்திரர் ஆகியோர் அங்கு சில நாட்கள் குகனுடன் தங்கிவிட்டு சுமந்திரர் இராமரிடத்தில் விடைபெற்று கோசலைக்கு திரும்பிச் செல்கிறார்.

கோசலை சென்றவுடன் மன்னர் தசரதரிடம் “.இராமரின் பிரிவினால் கோசல நாட்டில் அசையும் அசையாததுமான ஜீவன்களெல்லாம் துயரம் நிறைந்த நிலையில் இருப்பதை வழிநெடுகக் காணநேர்ந்தது” என்றார்.

இதைக்கேட்ட தசரதன் இவ்வாறு அறிவித்தான் “நான் துயரக்கடலில் மூழ்கிவிட்டேன்.இதனின்று வெளி வருவது கடினம்.இந்தத்துயரக்கடலின் கரைகள் கைகேயியின் இரு வரங்கள்,இராமருடைய வனவாசம் இக்கடலின் விஸ்தாரம்.நான் உள்ளும் புறமும் விடுகின்ற சுவாசமானது கடலின் அலைகள்,துயரத்தால் இருகைகளையும் தூக்கி வீசுகின்றேனே அது அக்கடலில் துள்ளும் மீன்கள்.என் விரிந்த தலை கேசங்கள் கடலின் காளான்கள்.நான் கதறும் கதறல் துயரக்கடலின் கடலோசை,கைகேயி ஆனவள் துயரக்கடலின் அடியில் தோன்றும் தீயானவள்.அந்தத்தீயானது என்னுடைய கொதிக்கும் கண்ணீரின் காரணமாகும்.மந்தரையின் வார்த்தைகள் கடலுக்குத்தொல்லை அளிக்கும் முதலைகளாகும்.

1 comment: