Thursday, June 4, 2009

திருக்குறள்

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

(குறள்-1087-இன்பத்துப்பால்-தகையணங்குறுத்தல் அதிகாரம்)

பெண்ணின் சரியாத மார்பகங்களின் மேல் அமைந்த கச்சு,மதயானையின் மேல் இரு மத்தகங்களையும் மறைக்குமாறு போர்த்திய முகபடாத்தை ஒத்திருக்கிறது.

முலைக்கச்சு,முகபடாத்துடன் ஒப்பிடப்பட்டிருப்பதன் காரணம்,முகபடாத்தின் தோற்றப்பொலிவும்,அது யாவரும் தொட முடியாததான இடத்திலிப்பதுமாகும்.
யானைப்பாகன் தவிர,வேறு யாரும் முகபடாத்தைத் தொடமுடியாதது போல, ஆடவரில் தலைவன் தவிர வேறு யாரும் பெண்ணின் முலைக்கச்சைத் தொட இயலாது என்பதை உணர்த்தவே இந்த உவமை.

No comments:

Post a Comment