Tuesday, June 16, 2009

நகுலன்

நகுலனின் ”யாத்திரை” குறுநாவலிலிருந்து ஒரு உவமை.

நகுலன் வழக்கமாக தனது படைப்புகளில் உலவவிடும் நவீனனின் எழுத்துப் பிரேமையையும்,எழுத்துப் பற்றிய நவீனனின் எண்ணங்களையும் விவரிப்பதாக அமைந்துள்ளது இந்த உவமையின் சூழல்.

“இந்த எழுதும் விஷயம் நவீனனுக்கு எப்பொழுதுமே ஒரு சுவாரஸ்யமான காரியமாகப்பட்டது.அவனுக்கு ஆங்கிலக்கவிஞன் வோர்ட்ஸ்வொர்த் எழுதுவதைப் பற்றிக் கூறியது ஞாபகம்.

அதில் அவன் வற்புறுத்தியதெல்லாம் அனுபவத்திற்கும் எழுத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும் என்பதுதான் என அவனுக்குத்தோன்றியது.ஏனெனில்,அப்பொழுதுதான் அனுபவத்தைச் சாட்சி பூதமாக நம்மால் பார்க்க முடிகிறது.ஒரு கலைஞன் தன்னை அறியாமலே தன்னைத் தயாரித்துக்கொள்கிறான்.தன்னை வளர்க்கும் உலகில் தானும் ஒன்றாக அமிழ்ந்த பால் உணர்ச்சி விழித்தெழுவது போல குறிப்பிட்ட சமயம் வரும்போது எழுத்தாளனாக பரிணாமம் அடைகிறான் என்று அவனுக்குத் தோன்றியது”.

No comments:

Post a Comment