Saturday, June 20, 2009

கனிமொழி

அகத்திணை,கருவறை வாசனை போன்ற கனிமொழியின் கவிதைத்தொகுப்புகளில் எனக்குப்பிடித்தது அகத்திணை. நெடிய தமிழ் மரபின் தொடர்ச்சியாக கனிமொழியின் கவிதைகளைக் காணலாம் என்ற நஞ்சுண்டனின் வாக்கியத்தை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அற்புதமான கவிதைத் தொகுப்பு.இத்தொகுப்பில், கனிமொழியின் பெரும்பான்மையான கவிதைகள் என்னைக்கவர்ந்தன.அவற்றில் ஒன்று,

எத்தனைமுறை விலக்கினாலும்
திரும்பத் திரும்பப் புரண்டு
மேலே கால் தூக்கிப்போடும்
குழந்தையாய் நினைவுகள்.

இந்தக்கவிதைப்பொருளின் உவமையை விளக்கும் அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

1 comment: